Sunday 2 September 2018

இரத்த தான முகாம் - பாரதி கலை மன்றத்தின் 36 வது ஆண்டு நிறைவு



        8 September , சனிக்கிழமை அன்று  நடைபெறவுள்ள ஆண்டு நிறைவு விழாவினைக் குறிக்குமுகமாக ஏற்பாடு செயப்பெற்ற இரத்த தான முகம் 1 September சனி அன்று பாரதி முன் பள்ளியில் சிறப்பாக இடம்பெற்றது. காலை 9:00மணி முதல் பி.ப 1:00 மணி வரையில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலை நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் கடமையில் ஈடுபட்டனர்.


பாரதி சமூகத்தினரும் ஏனைய கிராமத்தவரும் கலந்துகொடிருந்தனர்.பாரதி சமூக இளையோரால் முன்னெடுக்கப்பெற்ற நிகழ்வு, கன்னி முயற்சியாக இருந்த போதிலும் வெற்றி கரமாக இருந்ததாக இரத்த வங்கிச் சேவையினர் கருத்தை முன் வைத்தனர்.உடலில் உள்ள காயங்கள் காரணமாகவும்,போதிய நிறை இன்மையாலும், சில வகையான ஊசி மருந்துகள் ஏற்கனவே போடப்பட்டு இருந்தமையாலும் பலரிடம் இரத்தம் பெற இயலாமல் இருந்ததும்  குறிப்பிடத்தக்கது.