பாரதி கலை மன்றத்தின் 41 வது ஆண்டு நிறைவு விழா 26 / 08 / 2023 அன்று .
Bharathy's News Section
Friday, 25 August 2023
Tuesday, 21 June 2022
பாரதி கலை மன்றத்தின் 40 வது ஆண்டு நிறைவவு
பாரதி கலை மன்றத்தின் 40 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் நோக்கில் எதிர் வரும் 23 July 2022 அன்று வேறுபட்ட கலை நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Friday, 8 October 2021
Saturday, 29 May 2021
Saturday, 24 April 2021
ஊக்குவிப்பு
பிரான்ஸ் வாழ் பாரதி கலை மன்ற ஸ்தாபகத்தின் இரண்டாவது தலைவர் திரு.கனகசூரியர் ஸ்ரீதரன் அவர்களும், எமது மன்ற உறுப்பினர் திரு.சின்னையா கெங்காதரன் அவர்களும் மிக நீண்ட காலமாக எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் கரிசனை கொண்டிருப்பவரும், கலைமன்ற நலன் விரும்பியுமாகிய திரு. பால்சிங்கம் சுமன் அவர்களும் பிரான்ஸ் வாழ் கலைமன்ற நலன் விரும்பிகளுடன் இணைந்து எமது அறநெறி கல்விக்கும், கலைத்துறை பயிற்சி வகுப்புகளிற்கும் உதவ முன்வந்துள்ளனர்.அவர்களின் காலத்தின் தேவை அறிந்த முயற்சியை வரவேற்பத்துடன் அவர்களின் முயற்ச்சிக்கு துணையாக இருந்து எமது மன்றம் அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள ஆவலாகவுள்ளது.
பிரான்ஸ் வாழ் மன்ற நலன் விரும்பிகள் மேலும் பலர் இந்த முயற்சியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதனால் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
அறநெறிக் கல்வியை போதிப்பதற்கும் , சங்கீத வகுப்பினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Thursday, 22 April 2021
விக்ரோறியாக் கல்லூரி இரத்த தானம்
வழமைபோல இவ்வருடமும்










Tuesday, 20 April 2021
பாரதி கலை மன்ற செயற் குழு-2021
- தலைவர் : திரு.பிரவீண்சுபராஜ் உமேஷ்பிரசாந்
- உப-தலைவர் : திரு.விஜயகுமார் சூரியப்பிரகாஷ்
- செயலாளர் : செல்வி . கிருஷா ஒற்றியூரான்
- உப-செயலாளர் : செல்வி. பானுஷா பார்த்தீபன்
- பொருளாளர் : திரு.பொன்குணரத்தினம் இன்னிசைத்தமிழன்
பொறுப்பாளர்கள் :-
6.இந்து விவகாரம் : செல்வி.ருக்ஸனிகா பாவாநந்தன்
7.கலைத்துறை : செல்வி.மோகனப்பிரியா சுதாகரன்
8.விளையாட்டுத் துறை: திரு,செந்தில்நாதன் வைஷ்ணவப்பிரகாஷ்
9.முன்பள்ளி : திரு.துரைசிங்கம் இரவீந்திரன்
10. பத்திராதிபர் : செல்வி.கலக்க்ஷனா சின்னத்துரை
உறுப்பினர்கள் :-
11. திருமதி. ருபதாஸ் தயாளினி
12. திரு.சிவசுப்பிரமணியம் சிவராகவன்
13. திரு.கருணாகரன்.பிரதீபன்
14. திரு.சிவகுமார் பிரணவன்
15. திரு .தட்சணாமூர்த்தி உதயகுமார்
Tuesday, 16 February 2021
பாரதி முன்பள்ளியில் சிறார்களாக கற்று, பாடசாலை முகிழ் நிலை மாணவர்களாக 2021 இல் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான சிறப்பிப்பு நிகழ்வு 14 Feb 2021 அன்று பிற்பகல் பாரதி முன்பள்ளியில் இடம்பெற்றது. பாடசாலை முகிழ் நிலையில் 31 மாணவர்கள் இச் சிறப்பை பெற்றுக்கொண்டனர். திரு.வி .உமாபதி, மகப்பேற்று வைத்திய நிபுணர் கு.சுஜாகரன் ஆகியோரின் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரிய ர்களுடன் மாணவர்களும், சிறார்களும் ,அவர்தம் பெற்றோர்களும், முன்பள்ளி சமூகத்தினரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர். முகிழ் நிலை மனவர்களிற்க்கான கௌரவிப்பு அங்கிகள் அணிவிக்கப்பெற்று ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இருந்து மாணவர்கள் அணியாக அழைத்துவரப்பெற்றனர். முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வில் முகிழ் நிலை மாணவர்களுக்கான வாழ்த்துரைகளும் , ஆசிரியர்களிற்க்கான கௌரவிப்புகளும், முகிழ் நிலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன.