Thursday 28 May 2020

தேடல்.....28/05/2020

      பாரதி கலை மன்றத்தின் வரலாற்றுத் தடங்களில் இருந்து பதிவு ஒன்றினை ஓர் அன்பர் கேட்டார். தேடினேன்... அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. எத்தனையோ எமது பாரதி சமூகம் சார்ந்த விடயங்கள் இருந்த போதிலும் அவர் எதிர்பார்த்ததனை எம்மால் வழங்க இயலவில்லை என்பது கவலையான விடயம் தான். இருப்பினும் கவலைகளுடன் வாழ்வதனையும் விட எதிர்காலத்திலாவது இப்படியான கவலைகள் இன்றிய வாழ்வு அமையாதா? என எண்ணினோம். எவரையும்எதிர்பாராமல் விட்ட பணியை தொடர்வது என தீர்மானித்தோம். தொடர்வோம்.                " கலைமன்றம்" எனும் பதத்தினை பயன்படுத்துவதனை எவராவது ஆட்சேபித்தாலோ அல்லது திரைமறைவு விமர்சனங்களை முன்வைத்தாலோ எமது தலைப்பினை மாற்றுவதற்கும் தயங்கப் போவதில்லை. ஏனெனில் காலப் பதிவுகளில் பெரியதொரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தளத்தின்கடந்த காலப் பதிவுகளை நோக்கும்எவரிற்கும்இதன் பெறுமதி புரியும். எந்தவொரு சமூக வலைத் தளங்களிலும் இல்லாத சிறப்பை இங்கு காண முடியும். கலை மன்றமென்றாலென்ன முன்பள்ளியென்றாலென்ன எமது கிராமம் அயல்கிராமம் என்றால் என்ன அயற்பாடசாலைகளாக இருந்தாலென்ன ஆலயங்களாக இருந்தாலென்னநன்மை - தீமைகள், துக்கம் - சந்தோசம் ,கலைத் திறன்கள் உடற்திறன்கள் எதுவாக இருந்தால் என்ன அவை அனைத்தையும்ஒரே இடத்தில் அறிந்து கொள்ள கூடிய அற்புதமான யதார்த்த நிலை ஒன்றினை இங்கு காணலாம். ஆர்வமுள்ளோர் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.... நன்றி.