Friday 17 June 2016

பாரதி கலை மன்றத்தின் 34 வது ஆண்டு நிறைவு விழா- 2 July 2016


 பாரதி கலை மன்றத்தின் புதிய தோற்றம்


பாரதி கலை மன்றத்தின் 34 வது ஆண்டு நிறைவு விழா எதிர் வரும்  2 July 2016, சனிக்கிழமை பி.ப 3:00 மணி முதல் நடைபெறவுள்ளது. மன்றத் தலைவர் திரு.வி.உமாபதி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்,பிரதம விருந்தினராக யாழ்  மாவட்டச்செயலர் உயர் திரு.நா.வேதநாயகன் அவர்களும்,சிறப்புவிருந்தினர்களாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்  உயர்திரு.த.சத்தியமூர்த்தி அவர்களும்,வலி-மேற்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி.குணவதி சண்முகலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக விக்ரோறியாக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவர் திரு.அ.கிருபானந்தமனுநீதி அவர்களும், மூளாயூர் ஆசுகவி உயர்திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.நிகழ்வின் போது புதிய கலை மன்ற மேல்த்தள அங்குரார்ப்பண நிகழ்வும் ,பாரதி கலைமன்ற 'சுப்பையா அரங்கில்'பட்டி மன்றம்,'பாரதி' கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடு , ஆற்றலாளர்கள் கௌரவிப்பு ,அறநெறிப் பாடசாலை மாணவர்களின் 'சைவநீதி' நாடகம்,இன்னிசை நிகழ்வு ஆகியவற்றுடன் மன்ற உறுப்பினர்களின் சிற்றுரைகளும்,நடன நிகழ்வுகளும் முன்பள்ளி சிறார்களின் நடன நிகழ்வும் மேலும பல பல்சுவை அம்சங்களும் இடம் பெறவுள்ளன.சஞ்சிகைக்கான கைஎழுத்தினாலான ஆக்கங்கள வழங்க விரும்பும் புலம் பெயர் வாழ் உறவுகள் bharathykm1982@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் வேண்டுகின்றோம்