Monday 28 December 2015

பரமேஸ்வரராசா யோகரூபகுமார் (குமார்) - மரண அறிவித்தல்

திரு பரமேஸ்வரராசா யோகரூபகுமார்
சுழிபுரம் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் சங்காபிஷேக சபையின் ஆரம்ப கால உறுப்பினரும் சமய சமூக சேவைகளை புரிந்து அமரத்துவமடைந்த குமார் அவர்களின் பிரிவுச் செய்தி அறிந்து ஆறாத் துயரடைந்தோம்.அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி எல்லாம் வல்ல கதிர்வேலயுதப் பெருமானை இறைஞ்சுவோமாக.

சுழிபுரம் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் சங்காபிஷேக சபையினரும் பாரதி சமூகத்தினரும் 


 
(குமார்)
தோற்றம் : 13 ஒக்ரோபர் 1972 — மறைவு : 26 டிசெம்பர் 2015
யாழ். சுழிபுரம் மத்திய தேரியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரராசா யோகரூபகுமார் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமேஸ்வரராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அரசரத்தினம், அமிர்தலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமங்கலி(கவிதா- பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிரா(தரம் 5 மாணவி- வவுனியா இறைம்பைக்குளம் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத் தந்தையும்,
அருந்தவம்(ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம்), ஜசோதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன்(நெதர்லாந்து), சண்முகி(சைவபிரகாச மகளிர் கல்வி மாணவி- வவுனியா), கேமவண்ணன்(சுவிஸ்), நிருபா(ஆசிரியர்- வேலனை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷா, சாரா, பரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மதுரா, ரூபி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல. 132/14,
2ம் ஒழுங்கை,
வேப்பங்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருந்தவம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777967516
கேசவன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799431004
சுதர்சன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31681777426