Monday 28 December 2015

பாரதி முன் பள்ளி 2016 இல் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்களிற்கான வழியனுப்பு நிகழ்வும் பிறந்த நாள் நிகழ்வும்.


          மார்கழி மாதத்தில் பிறந்தநாள் காணும் எமது முன்பள்ளி சிறார்களிற்கான பிறந்த நாள் நிகழ்வு சிங்கப்பூரில் வதியும் எமது கிராமத்தவரான திரு.உமாபதி சயந்தன் அவர்களின் ஏக புத்திரன் செல்வன். ஐதுரிஷன் அவர்களின் 6 வது பிறந்தநாளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.


 இந்; நிகழ்வு நத்தார் தினமான 25/12/2015 அன்று பாரதி முன்பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பாரதி முன் பள்ளி மாணவர்கள் பெற்றார்களுடன் முன் பள்ளி சமூகத்தினர் பாரதி கலை மன்ற சமூகத்தினரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்
           பாரதி முன் பள்ளி முதன்மை ஆசிரியை திருமதி.ப.கிருஸ்ணவேணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 2015 மார்கழி மாதத்தில் பிறந்தநாள் காணும் மாணவர்களான செல்வன்.சுரேன் பிரஜன் செல்வன்.கோபிகிருஸ்ணன் உஷhந்தன செல்வன்.கதிர்வேல் யதுஷன். செல்வி.குகதாஸ்யோன்சிகா,செல்வன்.வேணுதாஸ் நிக்ஷன்இ செல்வி.ஹரிதாஸ் லதுரா ஆகியோரின் பிறந்த தினம் திரு.உ.சயந்தன் அவர்கள் குடும்பத்தினர் அனுசரணையுடன் கொண்டாடப்பெற்றது.

       
தொடர்ந்து 2016 இல் பாடசாலைகளிற்கு செல்;லவிருக்கும் 25 மாணவர்களிற்கான வழியனுப்பும் நிகழ்வு இடம்பெற்றது. கருத்துரைகளை மு.கு.தலைவர் திரு.து.இரவீந்திரன் முன்பள்ளி பெற்றார் சங்க போஷகர் திருமதி.சுதாகரன் ஜெயரஞ்சினி பெற்றார்கள் சார்பில் திரு.பரணீதரன் திருமதி.சி.சிவசக்தி  மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் திருமதி.கை.விஐயலட்சுமி ஆகியோர் நிகழ்த்தினர்.
           
 மாணவர்களிற்கான மேலங்கி (Coat) சிறப்புத் தொப்பி ஆகியன மகப்பேற்று நிபுணர் வைத்தியர் திரு.கு.சுஜாகரன் குடும்பத்தினரின் அனுசரணையுடன் அணிவிக்கப்பட்டு அவர்களிற்கான மதிப்பீட்டுப் புத்தகமும் சுயவிபர படிவ அட்டையும் முன்பள்ளி சமூகத்தினரால் வழங்கப்பெற்றன.