2009 ஆண்டு மே மாத முடிவிற் மூன்று தசாப்தங்களின் பின் ஈழம் என்னும் கனவு கலைந்து ,வடக்கும் கிழக்கும் மீண்டும் இலங்கை என்னும் பிரிக்க முடியாத ஒரு அலகின் பகுதியாகின. இராணுவம் வடக்கு கிழக்கெங்கும் பரந்து செறிந்து நிலைகொண்டது. முள்ளிவாய்க்காலில் இனவழிப்பைப் புரிந்த சிங்கள அரசாங்கம் அக் கொடிய யுத்தத்தை எப்படி நிகழ்த்தியது என்பதற்குச் சாட்சியாக ஆயிரக்கணக்கன ஓளிப்படங்களும் (Photos) அசைகாண் காட்சிகளும் (Videos ) மெய்நிகர்வெளியில் நிரம்பியிருக்கின்றன.