Sunday 28 June 2015

பாரதி கலை மன்றத்தின் 33வது ஆண்டு நிறைவு விழா - 25 மே 2015

சுழிபுரம் மேற்கு பாரதி கலை  மன்றத்தின் 33வது ஆண்டு  நிறைவு விழா 

ஆலய முன்றலில் விருந்தினர்கள்
   

    சுழிபுரம் மேற்கு  பாரதி கலை மன்றத்தின் 33 வது ஆண்டு விழா  24.05.2015 அன்று பாரதி முன்பள்ளி வளாக  சுப்பையா அரங்கில்   நடைபெற்றது.  நிகழ்வு பாரதி கலை மன்ற தலைவர் த.விமல் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், சங்கானை பிரதேச செயலக கலாசார உத்தியேகஸ்தர் திருமதி. காசிநாதன் நிருபா ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினராக சுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் வி.சிவராமன், மற்றும் சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


பாரதி முன் பள்ளி மாணவர்களின் நடனம்


தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) மாணவர்களுக்காண கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமன்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நிகழ்வு  மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த  அபிநய நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
வரவேற்பு நடனம் 

 இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தனின் வேண்டுகோளின் அடிப்படையில் லண்டன் வாழ் தழிழ் உறவான சுழிபுரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் சுழிபுரம் பெரியபுலோ அண்ணா சனசமூக நிலையத்தினருக்கு நிரந்தர கட்டடம் அமைக்கவென காணி கொள்வனவு செய்யும் பொருட்டு ரூபா.100000.00 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் பாரதி கலை மன்றத்தின் கட்டட நிதிக்காக ரவிசங்கரினால், ரூபா.100000.00 க்கான காசோலையும் கலைமன்றத்தின் தலைவர் த. விமல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த 33வது ஆண்டு நிறைவு நிகழ்வு கிராம மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

  இந்திய கலைஞர் செல்வி பாரதி அவர்களின் நடன அளிக்கை 





பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் 

மன்ற மேற்தள கட்டுமான பணிக்காக எமது மன்ற நலன் விரும்பி திரு.சி.ரவிசங்கர் அவர்களால் 100,000 /=  ரூபா காசோலை வழங்கப்பட்டபோது  
பிரதம விருந்தினர் உரை :-