Thursday 15 January 2015

கலை மன்ற பொங்கல் நிகழ்வு - 2015

     பிற்பகல் 4:30 மணியளவில் கலைமன்றத்தில் மன்ற தலைவர் திரு.த விமல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வை கலை துறை பொறுப்பாளர் சி.கிருஷ்ணாகரன் அவர்கள் நெறிப்படுத்தினார்
  முன்னதாக காலை 9:30 மணியளவில் எளிமையான முறையில் பொங்கல் நிகழ்வு மன்ற முன்றலில் இடம்பெற்றது.
        மாலை நிகழ்வின்போது மன்ற  மிருதங்க ஆசிரியர் மகேந்திரன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மன்ற இசை ஆசிரியை திருமதி.சி.சிவசக்தி அவர்களின் பாடல் நிகழ்விற்கு மன்ற ஓர்கன் ஆசிரியர் கருணா அவர்கள் பக்கவாத்தியம் இசைத்தார்.

தொடர்ந்து கடந்த கால நடன ஆசிரியை செல்வி.நிசாந்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டார் 
நிறைவாக மகேந்திரன் ஆசிரியரின் கருத்துரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன