Thursday 14 November 2013

பாரதி முன்பள்ளியின் பால் பொங்கும் வைபவம்.

இன்று யுகே மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் பல இலட்சம் ரூபா செலவில் EDC அமைப்பாளர் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட பாரதி முன்பள்ளியின் புதிய கட்டிடத்திறப்புவிழாவிற்கு பால் பொங்கும் வைபவம் இந்து சமயமுறைப்படி சிறப்பாக நடைபெற்றது. 
இச்சிறப்பு நிகழ்ச்சி சுழிபுரம் மேற்கு பெரியதம்பிரான் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களின் ஆதரவுடன் திருவுருவப்படங்கள் கொண்டுவரப்பட்டு பாரதி முன்பள்ளி புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்ட பின் பசும் பால் பொங்கும் வைபவம் இந்து சமய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமான திரு.சித்தாத்தன் அவர்கள் தனது உதவியாளர்களுடன் கலந்து கொண்டு இன் நிகழ்ச்சியை சிறப்பித்துத்தந்துள்ளார்.