Tuesday 16 February 2021

 பாரதி முன்பள்ளியில் சிறார்களாக கற்று, பாடசாலை முகிழ் நிலை மாணவர்களாக 2021 இல் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான சிறப்பிப்பு நிகழ்வு 14 Feb 2021 அன்று பிற்பகல் பாரதி முன்பள்ளியில் இடம்பெற்றது. பாடசாலை முகிழ்  நிலையில் 31 மாணவர்கள் இச் சிறப்பை பெற்றுக்கொண்டனர். திரு.வி .உமாபதி, மகப்பேற்று வைத்திய நிபுணர்  கு.சுஜாகரன் ஆகியோரின் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரிய ர்களுடன் மாணவர்களும், சிறார்களும் ,அவர்தம் பெற்றோர்களும், முன்பள்ளி சமூகத்தினரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.  முகிழ்  நிலை மனவர்களிற்க்கான கௌரவிப்பு அங்கிகள் அணிவிக்கப்பெற்று ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இருந்து மாணவர்கள் அணியாக அழைத்துவரப்பெற்றனர். முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வில் முகிழ் நிலை  மாணவர்களுக்கான வாழ்த்துரைகளும் , ஆசிரியர்களிற்க்கான கௌரவிப்புகளும், முகிழ் நிலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன.