கடந்த 24-05-2014 இல் நடைபெற்ற எமது மன்றத்தின் 32 வது ஆண்டு நிறைவு விழாவின் போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ .பொ .ஐங்கரநேசன் அவர்களால் வாக்குறுதி அளிகப்பட்டதற்கு இணங்க ,13-10-2014 அன்று எமது பாரதி முன் பள்ளியில் வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு உபகரணம் மூலம் எமது முன் பள்ளியில் கற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் தூய குடி நீரை அருந்தகூடியதாக உள்ளது.
இவ்வரிய பணியை மேற்கொண்டு தந்தமையால் குடி நீர் தொடர்பில் பெற்றார்களிடத்தில் இருக்க கூடிய ஐயப்பாடுகள் தீர்ந்து இருப்பதுடன் இவ் உபகரணத்தை பராமரிப்பதற்கு சிறிய தொகை பணத்தினை வழங்குவதன் மூலம் குடி நீர் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள இயலும் என எதிர்பார்க்கின்றோம் .