Friday 22 November 2013

EDC இன் முயற்சியால் கொண்டாடப் பட்ட மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்


எமது சுழிபுரம் கிராமத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் 17/11/2013 அன்று பாரதி முன் பள்ளி மண்டபத்தில் நாவலர் முன்பள்ளி மாணவர்களும், பாரதி முன்பள்ளி மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பிறந்ததின விழா ஒன்றை நடாத்தியுள்ளார்கள். ஒவ்வொரு மாதத்திலும் பிறந்த மாணவர்களின் பிறந்ததினவிழாக்கள் அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நாட்களில் கொண்டாடத்திட்டமிட்டு. இப்பிறந்தநாள்  விழாவை 70 மேற்பட்ட மாணவர்கள் அத்துடன் ஆசிரியர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து வெகு விமர்சையாக  கொண்டாடியுள்ளார்கள். இதன் மூலம் மாணவர்களிடையே  சமுதாய ஒற்றுமையை வளர்ப்பதுடன், நல்லுறவிற்கும் இவ்விழா  வழிவகுக்கின்றது. இதேபோன்ற முன்மாதிரியான நிகழ்வுகளை எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் பாராட்டுகின்றது .
                            நன்றி.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

See Photos